மணப்பாறை : மணப்பாறை அருகே அனுமதியின்றி கிராவல் மண் அள்ளியவர்கள் போலீசாரை கண்டதும் வாகனங்களை விட்டுவிட்டு தப்பியோடினர். இதனால் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சத்திரப்பட்டி குளத்தில் சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளிச் செல்வதாக திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை சத்திரப்பட்டி குளத்திற்கு சென்றபோது ஒரு கும்பல் பொக்லைன் இயந்திரம் மூலம் கிராவல் மண்ணை டிப்பர் லாரியில் ஏற்றிக் கொண்டிருப்பது தெரியவந்தது.