உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே, ரூ.20 லட்சம் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர். தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ஆனைமலையன்பட்டியில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். வெள்ளைக்கரடு பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் அருகே, இரண்டு பேர் சந்தேகப்படும்படி நின்றிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். அவர்களது பையை சோதனை செய்ததில் ரூ.2000, 500, 100 என கள்ளநோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன.