திருப்பூரில் ஊடுருவிய வங்கதேசத்தை சேர்ந்த 4 வாலிபர்கள் கைது

திருப்பூர்: திருப்பூர் தெற்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் உரிய ஆவணங்களின்றி வங்கதேசத்தினர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக, தெற்கு போலீசார் விசாரணை நடத்தினர். இதில், வங்கதேசத்தினர் சிலர் பூம்புகார் நகர் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தது தெரியவந்தது. நேற்று அங்கு சென்ற போலீசார், அங்கிருந்த 4 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், வங்கதேசத்தை சேர்ந்த மெகபூல் சித்தர் (35), ஷோகில் அல்கர் (33), முகமது முன்னாகான் (32), அல் அமீன்(23) என்பதும், உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் மேற்குவங்கம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து, திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பனியாற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரையும் தெற்கு போலீசார் கைது செய்தனர்.

Related Stories: