மசினகுடி அருகே வாகனம் மோதி லங்கூர் மந்தி பலி

ஊட்டி :முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடியில் இருந்து மாவனல்லா செல்லும் சாலையோரத்தில் சாம்பல் நிற லங்கூர் மந்தி ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தெப்பக்காடு வன கால்நடை மருத்துவர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு இறந்த லங்கூரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில், சாலையை கடக்கும் போது வாகனம் மோதியதில் உயிரிழந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்கு பின் லங்கூரின் உடல் தீயிட்டு எரிக்கப்பட்டது.இதுதொடர்பாக, மசினகுடி வனச்சரகத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர்.

Related Stories: