காஞ்சிபுரம் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர், எஸ்பி ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தை கலெக்டர் ஆர்த்தி,  எஸ்பி சுதாகர் ஆகியோர் ஆய்வு செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய ஒன்றியங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்த உள்ளன. இதையொட்டி, ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள 1281 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டிகள் காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன. இங்கு  வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கப்படுவதற்காக உரிய ஏற்பாடுகளை செய்வதற்காக கலெக்டர் ஆர்த்தி, எஸ்பி சுதாகர் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சித் தேர்தல்) ஸ்டீபன் ஜெயச்சந்திரா, வட்டார வளர்ச்சி அலுவலர் (தேர்தல்) தினகரன் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: