சென்னை: தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் என்பது `தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்’ என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அது வருமாறு: கோட்டையிலே இருந்தாலும் குடிசை வாழ் மக்களின் வாழ்க்கைக்காக, அவர்களுடைய முன்னேற்றத்திற்காக சிந்தித்தவர் தலைவர் கலைஞர். முதன்முறையாக ஆட்சிக்கு வந்தபோது, அந்த மக்களுடைய வாழ்க்கை மேம்பாட்டுக்காக குடிசை மாற்று வாரியம் என்ற ஒரு திட்டத்தை தொடங்கினார். அதன்மூலமாக, பல்லாயிரக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிக் கொடுத்தார்.
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் என்பது ‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்’ என பெயர் மாற்றம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவிப்பு
- தமிழ்நாடு சேலம் மாற்று வாரியம்
- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
