திருமலை: தெலங்கானா மாநிலம், ராஜண்ண சிறிசில்லா மாவட்டம், கம்பீரவுப்பேட்டை- லிங்கண்ணப்பேட்டை இடையே அம்மாநில அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் வழக்கம் போல் நேற்று முன்தினம் மாலை லிங்கண்ணப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தது. மன்னேரு ஆற்று கால்வாய் பாலத்தில் சென்றபோது திடீரென வெள்ளம் அதிகரித்து பாலம் மூழ்கியது. பஸ்சும் வெள்ளத்தில் சிக்கியது. பயணிகள் அலறி கூச்சலிட்டனர். உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.