ஆவடி: திருமுல்லைவாயல் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் நேற்று முன்தினம் இரவு மப்டியில் திருமுல்லைவாயல் ரயில்வே ஸ்டேஷன் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் வந்து திருமுல்லைவாயல், ஸ்ரீநகர் காலனியில் பாலியல் தொழில் நடப்பதாகவும், அங்கு பெண்களிடம் உல்லாசமாக இருப்பதற்கு கட்டணமாக ரூ.2 ஆயிரம் வசூலிப்பதாகவும் ஆசை வார்த்தைக்கூறி அவரை அழைத்துள்ளார். இதனையடுத்து, அவர் ரூ.2 ஆயிரத்தை ஏடிஎம்மில் எடுத்துக்கொண்டு பாலியல் விடுதிக்கு சென்றுள்ளார். அங்கிருந்த மற்றொரு நபர் அவரிடம் ரூ.2 ஆயிரத்தை வாங்கிக்கொண்டு விடுதிக்கு உள்ளே அனுப்பினார்.