சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக பிச்சுப்பிள்ளை தெருவில் சுமார் 2166 சதுர அடி மனை வேதாச்சலம் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டு இருந்தது. இந்த மனை கோயிலுக்கு மிகவும் அருகாமையில் இருந்த நிலையில், பல ஆண்டுகளாக வாடகை தரவில்ைல. இது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் பலமுறை தகவல் தெரிவித்தும், ரூ.8.50 லட்சம் வரை வாடகை பாக்கி செலுத்தவில்லை. எனவே, அந்த இடத்தை கோயில் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த 2012 ஆகஸ்ட் 27ம் தேதி நோட்டீஸ் தரப்பட்டது. ஆனால், இதை எதிர்த்து வாடகைதாரரின் வாரிசுதாரர் விஜயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.