ஆவடி: நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் கவரிங் செயின் பறித்து தப்பிய வாலிபர், வாடகை வீடு தேடிவந்தபோது சிக்கினார். அவரை பொதுமக்கள் அடித்துஉதைத்து போலீசில் ஒப்படைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அம்பத்தூர் மேனாம்பேடு இந்திரா நகரை சேர்ந்தவர் ரவி. இவர் மின்வாரியத்தில் போர்மேனாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி இந்துமதி (52). இவர் கடந்த 27ம்தேதி அதிகாலையில் மேனாம்பேடு சர்வீஸ் சாலையில் நடைபயிற்சி சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபர், இந்துமதி அணிந்திருந்த 10 சவரன் செயினை பறித்து தப்பினார். அது கவரிங் செயின் என்பதால் இந்துமதி நடந்த சம்பவம் பற்றி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. இந்த நிலையில், தனது வீட்டின் அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்க வந்த நபர், தன்னிடம் செயின் பறித்து தப்பியவர் என்பதை பார்த்துவிட்ட இந்துமதி கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அப்பகுதியினர் வந்தபோது நடந்த சம்பவத்தை அவர்களிடம் தெரிவித்தார்.