மதுரை: ‘‘நித்யானந்தா, மதுரை ஆதீனத்திற்கு வந்தால் அவரை போலீசார் கைது செய்வர். அவரை பெரிதுபடுத்த வேண்டாம்’’ என மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அரிகர ஞானசம்பந்த பரமாச்சாரிய தேசிக சுவாமிகள் தெரிவித்துள்ளார். அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஆதீனத்தில் வித்வான், ஓதுவார் நியமித்தல், மூன்று வேளையும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளது.