லக்னோ: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரப் பிரதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அவர் ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் அயோத்தி நகரை பார்வையிட்டார். ராமாயணம் தொடர்பான கூட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில்அவர் பேசுகையில், ‘‘ராமர் இல்லாமல் அயோத்தி ஒன்றுமே இல்லை. எங்கு ராமர் இருக்கிறாரோ அங்குதான் அயோத்தி இருக்கும். ராமர் நிரந்தரமாக அயோத்தியில் வசித்து வருகிறார். எனது குடும்பத்தினர் எனக்கு பெயர் வைத்ததின் மூலம், அவர்கள் கடவுள் ராமர் மீது வைத்திருந்தத்தை பற்றை காணலாம்.