விருதுநகர்: விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சியில் பாண்டியன்நகர்- முத்தால் நகர் இடையிலான தேவர் சிலை எதிர்புறத்தில் கடந்த மார்ச் மாதம் அவசர கதியில் ரோடுகள், வாறுகால் பாலங்கள் அதிமுக ஆட்சியின் போது கட்டப்பட்டன. அவற்றில் சிவமுருகன் தெருவில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. பள்ளிக்கூடம் செல்லும் தெருவில் வாறுகால் பாலம் கட்டி 5 மாதங்களாகிறது. வாறுகால் மற்றும் பாலம் கட்டிய ஒப்பந்தகாரர் பாலத்தில் எம்சாண்டை வைத்து பாலம், வாறுகால் கட்டியதாக தெரிகிறது.