சென்னை: ஆத்ம நிர்பார் திட்டத்தின் ஒரு பகுதியாக, எல்ஐசி ஏஜென்ட்கள் வாடிக்கையாளர்களின் பாலிசி விவரங்களை மின்னணு முறையில் பதிவு செய்ய ஆனந்தா என்ற மொபைல் ஆப்சை எல்ஐசி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆனந்தா மொபைல் ஆப்ஸ் மூலம், வாடிக்கையாளர்களின் விவரங்கள் ஆதார் எண் அடிப்படையில் உறுதி செய்யலாம். காகித விண்ணப்பங்கள் இன்றி, மின்னணு முறையிலேயே விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்கலாம். இது முகவர்களின் பணியை எளிதாகவும் விரைவாகவும் முடிக்க உதவுவதோடு, அதிக வாடிக்கையாளர்ளை ஈர்க்கவும் வழி வகுக்கிறது. புதிய ஆப்சை எல்ஐசி இந்தியாவின் தலைவர் எம்.ஆர்.குமார், வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார்.