காபூல்: ஆப்கானில் நிருபர் ஒருவர் தலிபான்களால் தாக்கப்பட்ட நிலையில், அவரை தலிபான்கள் கொன்றதாக ஊடகங்களில் செய்தி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர், சர்வதேச பத்திரிகையாளர்கள் குறிவைத்து தாக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ‘டோலோ’ நியூஸ் பத்திரிகையாளர் ஜியார் யாத் தலிபான் என்பவர் தலிபான்களால் தாக்கப்பட்டார். மேலும் அவரது கேமரா, மொபைல் போன் உள்ளிட்டவை தீவிரவாதிகளால் பறிக்கப்பட்டது. அவர், திடீரென மாயமானதால் ஜியார் யாத்தை தலிபான்கள் சுட்டுக் கொன்றதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. ஆனால், ஜியார் யாத் தனது மரணம் குறித்த செய்திகளை மறுத்து டுவிட் செய்துள்ளார்.