ஆரணி: ஆரணி அடுத்த வடுகச்சாத்து டாஸ்மாக் கடையில் ரூ.46 லட்சம் கையாடல் தொடர்பாக, சூபர்வைசர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன் (47). இவர் வடுகச்சாத்து கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் சூபர்வைசராக இருந்தார். இவர், கடந்த 2016 முதல் 2018 வரை டாஸ்மாக் கடையில் தினமும் வசூலாகும் பணத்தை சரிவர வங்கியில் செலுத்தாமல் முறைகேடு செய்ததாக கூறப்பட்டது. மேலும், மதுபான இருப்பு விவரங்களையும் சரிவர சமர்ப்பிக்கவில்லை. இதையடுத்து, கடந்த 2018ல் அதிகாரிகள் அந்த கடையில் ஆய்வு செய்தபோது முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது.