அல்ட்ராமரைன் அண்டு பிக்மெண்ட்ஸ் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை சிப்காட்டில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. ராணிப்பேட்டை சிப்காட் அல்ட்ராமரைன் அண்டு பிக்மெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில் அதன் வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை சிப்காட் அல்ட்ராமரைன் அண்டு பிக்மெண்ட்ஸ் நிறுவன இயக்குனர் சி.ஆர்.செந்தில்குமார் துவக்கி வைத்தார்.

நிர்வாக மேலாளர் வி.ரவி முன்னிலை வகித்தார். முகாமில் லாலாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பங்கேற்று தடுப்பூசிகளை போட்டனர். இதில், தொழிலாளர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என 1,500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த கொரோனா தடுப்பூசி முகாம் 6வது முறையாக நடந்தது.

Related Stories: