செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் தேசிய வேளான் அபிவிருத்தி திட்டம் மூலம், மீன் வளர்ப்பை விரிவுபடுத்த மானியம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. செங்கல்பட்டு மாவட்டத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மூலம், மீன் வளர்ப்பை விரிவுபடுத்தி மானியம் வழங்கும் திட்டத்தில் பயன்பெறலாம். இதையொட்டி, மீன்வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு ஹெக்டேரில் ரூ.7 லட்சம் செலவு செய்து நீர் வளர்ப்புகுளம் அமைக்க 50 சதவிதம் மானியமாக ரூ.3.5 லட்சம் மற்றும் ஒரு ஹெக்டேர் நீர்பரப்பில் மீன்வளர்ப்பு செய்யப்படும் உள்ளீட்டு செலவின தொகையாக ரூ.1.5 லட்சத்தில் 40 சதவிதம் மானியமாக ரூ.60 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.