சின்சினாட்டி: வெஸ்டர்ன் அண்ட் சதர்ன் ஓபன் டென்னிசில் அலெக்சாண்டர் ஸ்வரெவும், ஆஷ்லீ பார்டியும் சாம்பியன் பட்டம் வென்றனர். சின்சினாட்டியில் இன்று அதிகாலை நடந்த வெஸ்டர்ன் அண்ட் சதர்ன் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு பைனலில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரெவும், ரஷ்ய வீரர் ஆண்ட்ரே ரப்லெவும் மோதினர். இதில் 6-2, 6-3 என நேர் செட்களில் வென்று, ஸ்வரெவ் சாம்பியன் பட்டம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று சாதித்த ஸ்வரெவ், தொடர்ந்து சின்சினாட்டியிலும் பட்டம் வென்றுள்ளார். அவர் கூறுகையில், ‘‘முதன் முறையாக சின்சினாட்டி ஓபன் பட்டத்தை வென்றது மகிழ்ச்சிதான். ஆனால் நான் இதை கொண்டாடப் போவதில்லை. ஏனென்றால் ஆண்ட்ரே ரப்லெவும், நானும் 11 வயது முதல் நெருங்கிய நண்பர்கள்.