தேனி: தேனி அருகே குன்னூர் வைகை ஆற்றில் ஆகாயத் தாமரை அதிக அளவில் வளர்ந்துள்ளதால் தண்ணீர் மாசுபடியும் அவலம் உள்ளது. தேனி அருகே குன்னூரில் வைகை ஆறு உள்ளது. வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாகவும் இந்த வைகை ஆறு உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 67 அடியை தாண்டும்போது, குன்னூர் வைகையாற்றில் தண்ணீர் கடந்து செல்ல வழியில்லாமல் வைகை அணையின் நீ்ர்ப்பிடிப்பு பகுதியாக மாறி விடுகிறது. இதனால், வைகை அணையில் நீர்மட்டம் உயரும்போது, குன்னூர் வைகையாற்றில் தண்ணீா தேங்கி நிற்கிறது. தற்போது, வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் குன்னூர் வைகையாற்றில் தண்ணீர் தேங்கியுள்ளது.