திருவண்ணாமலை: கொரோனா ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் திருவண்ணாமலை கோவிலில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்ல பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம். கிரிவலம் செல்ல பக்தர்கள் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.