ஆப்கானிஸ்தானில் விமானத்தில் தொங்கிய கால்பந்து வீரர் பலி

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். இதனால் நாட்டில் அடக்குமுறைகள் தலைதூக்கும் அச்சத்தில் அந்நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று வருகின்றனர்.  கடந்த சில நாட்களுக்கு முன் காபூரில் இருந்து கிளம்பிய விமானம் ஒன்றில் படிக்கட்டுகளிலும் சக்கரங்களிலும் தொங்கியபடி பயணம் செய்தனர். இதில் 3 பேர் கீழே விழுந்து பலியான சம்பவம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாக பரவியது.  

இந்நிலையில் விமானத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தவர்களில் ஒருவர் அந்நாட்டு கால்பந்து அணி வீரர் என தெரியவந்துள்ளது. தேசிய இளைஞர் அணிக்காக விளையாடிய 19 வயதான ஜகி அன்வரின் உடல் பாகங்கள் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பத்திரிகையாளர் ஒருவர் கூறுகையில், அமெரிக்காவின் ச-17A  விமானத்தின் தரையிறங்கும் கியரை பிடித்து காபூலை விட்டு வெளியேற முயன்ற இளைஞர்களில் ஜகிஅன்வரியும் ஒருவர். இவர் ஆப்கானிஸ்தானின் தேசிய இளைஞர் கால்பந்து அணியின் வீரர் என தெரிவித்தார். முன்னதாக அன்வரின் உடல் தரையிறங்கும் கியரில் சிக்கி இருந்ததால், காபூலை விட்டு புறப்பட்ட விமானம் அவசரமாக கத்தாரில் தரையிறங்கியது.

Related Stories: