வெலிங்டன்: 7வது ஐசிசி டி.20 உலக கோப்பை தொடர் அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் 15 பேர் கொண்ட அணியையும் அறிவித்துள்ளன. இந்நிலையில் நியூசிலாந்து முன்னாள் வீரரான பிரெண்டன் மெக்கல்லம் தனது டுவிட்டரில், ``இந்த டி20 உலக கோப்பை தொடரில் எதிர் அணிகளுக்கு மிகவும் கடுமையான போராட்டத்தை கொடுக்கும் அணியாக ஆஸ்திரேலிய அணியை குறிப்பிட்டுள்ளார்.