கென்யா தலைநகர் நைரோபியில் உலக யு20 தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. அதில் நேற்று முன்தினம் நடந்த 4X400 கலப்பு தொடர் ஓட்டம் தகுதிச் சுற்றில் இந்தியர்கள் அப்துல் ரசாக், கபில், பிரியா மோகன், சம்மி ஆகியோர் பந்தய தொலைவை 3நிமிடம் 23.36 விநாடிகளில் கடந்து இறுதி சுற்றுக்கு முன்னேறினர். தொடர்ந்து நடைபெற்ற இறுதிப்போட்டியில் அப்துல் ரசாக்கிற்கு பதிலாக தமிழக வீரர் பரத் ஸ்ரீதரன் களிமிறக்கப்பட்டார். இறுதியில் இந்தியக்குழு 3நிமிடம் 20.60விநாடிகளில் பந்தய தொலைவை கடந்து 3வது இடம் பிடித்து வெண்கலத்தை வென்றது. தங்கள் சுற்றை முடிக்க தகுதிச்சுற்றில் அப்துல் ரசாக் 48.18விநாடிகளும், இறுதிச் சுற்றில் பரத் 47.55விநாடிகளும் எடுத்துக் கொண்டனர்.