வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வண்டுவாஞ்சேரி சரபோஜிராஜபுரத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. பெரிய திடல் பகுதியை சேர்ந்த விவசாய தொழிலாளியான நாகப்பன் மனைவி அலமேலு(70), கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு கொண்டார். இதையடுத்து முகாம் நடந்த இடம் அருகே உள்ள மரத்தடியில் அலமேலு அமர்ந்திருந்தார். அப்போது ஆண்கள் வரிசையில் கூட்டம் குறைவாக இருந்ததால் அந்த வரிசையில் பெண்களும் சென்று தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள் என்று அங்கு நின்ற ஒரு சிலர் கூறினர். மேலும் ஏற்கனவே ஊசி போட்டது தெரியாமல் மரத்தடி நிழலில் அமர்ந்திருந்த அலமேலுவையும் தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு அந்த வரிசையில் அங்கிருந்த மக்கள் அனுப்பி வைத்தனர்.