திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம், அண்ணா நகரை சேர்ந்தவர் ராமு (34). ராணுவ வீரர். இவர் இரண்டு கைகளையும் தலையில் வைத்து கொண்டு படுத்து, வேகமாக எழும்பும் சிட் அப்ஸ்சில் ஏற்கனவே பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். தற்போது ஸ்காட்லாந்தை சேர்ந்த ராபர்ட் என்ற வீரர் ஒரு மணிநேரத்தில் 2,289 சிட் அப்ஸ் செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளார். இதை முறியடிக்க சுதந்திர தினமான நேற்று முன்தினம் மாலை சாதனை முயற்சியில் ராமு ஈடுபட்டார்.திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பயிற்சியாளர்கள், பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்நிகழ்வினை டவுன் இன்ஸ்பெக்டர் மாயராஜலட்சுமி துவக்கி வைத்தார்.