புதுடெல்லி: சட்டீஸ்கர், மகராஷ்டிராவில் செயல்படும் நக்சல் அமைப்புகளில் ஆயுதம் ஏந்தி போராடுபவர்களின் 40 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட் அமைப்புகள் தீவிரமாக செயல்படுகின்றன. இவர்களை ஒடுக்குவதற்காக சிறப்பு பாதுகாப்பு படைகள் உருவாக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவர்கள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்்கியால் சுட்டும், குண்டுகளை வைத்தும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த சிறப்பு படைகளின் நடவடிக்கை காரணமாக, இம்மாநிலங்களில் நக்சல்களின் நடவடிக்கைகள் பெருமளவு முடக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், சட்டீஸ்கர், மகாராஷ்டிரா மாநிலங்களில் செயல்படும் நக்சல் அமைப்புகளில் 40 சதவீதம் பெண்கள் இடம் பெற்று இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.