குடோனில் பதுக்கிய 12 டன் ரேஷன் அரிசி, கோதுமை பறிமுதல்

புழல்: செங்குன்றம் அடுத்த வடகரை - மாதவரம் நெடுஞ்சாலையில், தனியாருக்கு சொந்தமான சிமென்ட் குடோன் உள்ளது. இந்த குடோனின் ஒரு பகுதியில் ரேஷன் அரிசி, கோதுமை ஆகிய உணவுப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக, போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று காலை செங்குன்றம் போலீசார், அந்த குடோனில் சோதனை மேற்கொண்டனர். அதில், 12 டன் ரேஷன் அரிசி மற்றும் 500 கிலோ கோதுமை அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கு இருந்த திருவாரூரை சேர்ந்த லாரி டிரைவர் விக்னேஷ்(30) என்பவரை கைது செய்தனர். மேலும், கொடுங்கையூர் திருமலையை தேடுகின்றனர்.  

Related Stories: