ஒன்றியக்குழு தலைவர் கோரிக்கை ஏற்பு ஆதிரெங்கத்தில் ஒரே நாளில் 5,530 பனை விதை சேகரிப்பு

திருத்துறைப்பூண்டி : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் வேளூர் பாலம் தொடங்கி பாமணி பாலம் வரை அடப்பாற்று கரையிலும், பூசலாங்குடி ஊராட்சி சிதம்பர கோட்டகம் பாலம் தொடங்கி தகர வெளி பாலம் வரை, திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலை தொடங்கி கட்டிமேடு, பிச்சன்கோட்டகம், மேலமருதூர் வரை வளவனாற்று கரை பகுதிகளில் பனை விதை விதைக்க ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு பனை விதைகள் வழங்கி உதவ வேண்டும் என்று ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் கோரிக்கை வைத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று ஆதிரெங்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வீரசேகர் தலைமையில் ஒரே நாளில் 5530 பனை விதைகள் சேகரிக்கப்பட்டது.

Related Stories: