டெல்லி: இந்தியாவில் செயல்பட்டு வரும் அரசு சாரா தன்னார்வ அமைப்புகள் கடந்த 3 ஆண்டுகளில் 49 ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாட்டு நன்கொடை பெற்றிருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அரசு சார்பற்ற அமைப்பு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனம் என்பது தனியாரால் அல்லது அரச பங்களிப்பு அல்லது சார்பற்று சட்டப்படி உருவாக்கப்படுகின்ற அமைப்புக்களாகும். அரசுத்துறை மற்றும் தனியார் துறைக்கு அடுத்து அரசு சார்பற்ற அமைப்புகள் மூன்றாம் துறையாக விளங்குகிறது. இந்நிலையில், அரசு சாரா தன்னார்வ அமைப்புகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளார்.