புழல்: செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி சார்பில் கொரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு பேரணி பேரூராட்சி வளாகத்திலிருந்து புறப்பட்டு ஜி.என்.டி சாலை, அண்ணா பேருந்து நிலையம், திருவள்ளூர் கூட்டு சாலை வரை சென்று பேரூராட்சி அலுவலகம் வந்தடைந்தது. இந்த பேரணியில் அனைவரும் கட்டாயம் முகக்கவசங்கள் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரூராட்சியில் பணியாற்றும் ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.