நாட்டிங்காம்: இங்கிலாந்து-இந்தியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 183, இந்தியா 278 ரன் எடுத்தன. 95 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 85.5 ஓவர்களில் 303 ரன் எடுத்து ஆல்அவுட் ஆனது. கேப்டன் ஜோ ரூட் 109 ரன் அடித்தார். இதையடுத்து 209 ரன் வெற்றி இலக்குடன் 2வது இன்னிங்சை ஆடிய இந்தியா 4ம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன் எடுத்திருந்தது. 5ம் நாளான நேற்று அடைமழை பெய்ததால் ஒரு பந்துகூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் போட்டி டிராவில் முடித்துக்கொள்ளப்பட்டது. இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்த நிலையில் மழையால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக இரு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகள் வழங்கப்பட்டன. ஜோ ரூட்டிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. போட்டி முடித்துக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி கூறியதாவது: 5வது நாளில் இலக்கை நோக்கி ஒரு நல்ல வேகத்தை எதிர்பார்த்தோம்.