மதுரை: திருச்சியைச் சேர்ந்த யூடியூபர் துரைமுருகன். இவர், அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறு ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டதாக திருப்பனந்தாள் போலீசார் கடந்த ஜூன் 16ல் கைது செய்தனர். இந்த வழக்கில் திருவிடைமருதூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் துரைமுருகனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து தனக்கு ஜாமீன் கேட்டு ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.