உத்திரமேரூர்: உத்திரமேரூரில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை செயல்படுகிறது. இங்கிருந்து 27 பஸ்கள் மற்றும் 5 ‘ஸ்பேர்’ பஸ்கள் என மொத்தம் 32 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பணிமனையில் நேற்று முன்தினம் விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குனர் பொன்முடி திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் கடந்த 3 ஆண்டுகளாக முறையான பஸ் பராமரிப்பு குறித்து போக்குவரத்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப்பின், தமிழகத்திலேயே 100 சதவீதம் பஸ்களை இயக்கி, உத்திரமேரூர் பணிமனை சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களை பாராட்டினார்.