கொரோனா தொற்று தடுப்பு விழிப்புணர்வு

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்பேரில் பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை ஆகிய பேரூராட்சிகளில் பேரூராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை இணைந்து கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி காந்தி சிலை அருகே நேற்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் ஏ.சி.முனுசாமி தலைமை வகித்தார்.

இதில், வட்டார மருத்துவ அலுவலர் தனஞ்செயன், வட்டாட்சியர் கதிர்வேலு ஆகியோர் கலந்துகொண்டு கொரோனா நோய் தொற்று வராமல் தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  இந்நிகழ்ச்சியில், சமூக இடைவெளி கடைபிடிப்பது, முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவுவது உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள் வியாபாரிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

Related Stories: