பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்பேரில் பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை ஆகிய பேரூராட்சிகளில் பேரூராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை இணைந்து கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி காந்தி சிலை அருகே நேற்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் ஏ.சி.முனுசாமி தலைமை வகித்தார்.