உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கு சிறுமியின் விபத்தில் சதி இல்லை

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு சிறுமி (அப்போது 18 வயதுக்கு உட்பட்டவர்), பாஜ எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, இந்த பெண் காரில் செல்லும் போது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பெண்ணின் 2 அத்தைகளும், அவரது வழக்கறிஞரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சதி இருக்கிறதா என விசாரித்த சிபிஐ, விபத்தில் சதி திட்டம் எதுவும் இல்லை என தெரிவித்தது. இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், ‘ சிபிஐ விசாரணையின் நம்பகத்தன்மையை சந்தேகிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை,’ என தெரிவித்தது. இதை டெல்லி உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

Related Stories: