மேட்டூர் நீர்மட்டம் 81 அடியாக உயர்வு

மேட்டூர்: கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரிநீர் காரணமாக ஒகேனக்கல் காவிரியில் நேற்று 24 ஆயிரம் கனஅடி நீர் வந்தது.  இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 29,666 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி 30,199 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்படுகிறது. வரத்தை விட திறப்பு குறைவாக இருப்பதால், நேற்று முன்தினம் 79.16 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 81 அடியானது. நீர் இருப்பு 42.84 டிஎம்சியாக உள்ளது.

Related Stories: