திருவள்ளூர்: மகளிர் சுய உதவிக் குழு பெண்களை தொழில் முனைவோராக்கும் திறன் வளர்ப்பு பயிற்சி நடந்தது. ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனமும் பெல் ஸ்டார் அமைப்பும் இணைந்து நடத்தியது. பூண்டி வட்டாரத்தில் உள்ள சித்தம்பாக்கம் கிராமத்தில் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்ட சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 30 பெண்கள் தையல் தொழில் திறன் வளர்ப்பு பயிற்சிக்குதேர்வு செய்யப்பட்டனர். ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா சுய உதவிக் குழுக்களின் என்டர்பிரைசஸ் பிரிவை சேர்ந்த சீனியர் மேலாளர் மதுரை அழகர், ஊராட்சி தலைவர் சித்ரா பிரகாஷ், ஊராட்சி செயலர் சுரேஷ்குமார், பெல்ஸ்டார் நிறுவன வட்டார மேலாளர் பாலமுருகன், கிளை மேலாளர் ஜெகநாதன், என்டர்பிரைஸ் எக்ஸ்குட்டிவ் ஆஷா ஆகியோர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். முடிவில் பரமேஸ்வரி நன்றி கூறினார்.