காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பெருநகராட்சி பகுதியில் உள்ள கடைகளில், ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி விற்பனை செய்யும் கடைகள் மீது அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
இந்நிலையில் காஞ்சிபுரம் பெருநகராட்சியில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காஞ்சிபுரம் நகராட்சி கமிஷனர் லட்சுமிக்கு தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின்பேரில் நகராட்சி நகர் நல அலுவலர் முத்து, சுகாதார ஆய்வாளர்கள் இக்பால், சீனிவாசன், துப்புரவு மேற்பார்வையாளர் கணேசன் ஆகியோர் காஞ்சிபுரம் ரயில்வே ரோட்டில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.