டெல்லி: டெல்லி மாநிலத்தில் பேருந்துகள் வாங்கியதில் கெஜ்ரிவால் அரசு ஊழல் செய்ததாக கூறி காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் தனித்தனியே போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முதலமைச்சர் கெஜ்ரிவால் வீட்டின் அருகே திரண்ட காங்கிரஸ் தொண்டர்கள், அரசை கண்டித்து முழக்கம் எழுப்பியபடி அவரது இல்லம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது தடுப்புகளை மீறி செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்ததால் போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.