வருசநாடு: வருசநாடு அருகே, ஆடுகள் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம், வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பெரியசாந்திபுரத்தை சேர்ந்தவர் அம்சமணி. விவசாயி. ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர் நேற்றிரவு தனது 20 செம்மறி ஆடுகளை குடிக்க தண்ணீர் வைத்து விட்டு, கொட்டத்தில் அடைத்து கொண்டிருந்தார். ஆனால் தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக 14 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்தன. மீதமுள்ள 6 ஆடுகள் உயிரிழக்கும் நிலையில் உள்ளன.