ஆவடி: பாடியில் நள்ளிரவு சரக்கு ஆட்டோ எரிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை கொரட்டூர் திருவள்ளுவர் 3வது தெருவை சேர்ந்தவர் அனீபா (76). இவர் சரக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்றிரவு சவாரியை முடித்துவிட்டு பாடி மஞ்சகுப்பம் சர்ச் சாலையோரமாக தனது வண்டியை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். நள்ளிரவு 1 மணி அளவில் சரக்கு ஆட்டோ எரிந்துகொண்டிருப்பதாக கிடைத்த தகவல்படி, அனீபா அங்கு விரைந்தார்.