இந்தியா மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கான, அனைத்து இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கான 27 % உடனடியாக வழங்குக: டி.ஆர்.பாலு, எம்.பி., கடிதம் Jul 27, 2021 டாக்டர் பாலு டெல்லி: மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கான, அனைத்து இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீதத்தை உடனடியாக வழங்குக என ஒன்றிய சுகாதார அமைச்சருக்கு டி.ஆர்.பாலு, எம்.பி., கடிதம் அனுப்பியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவருமான, டி.ஆர்.பாலு, 27 சதவீத ஒதுக்கீடு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர மன்சுக் மாண்டவியாவுக்கு கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகிய அனைவருக்குமான வளர்ச்சியை உறுதிப்படுத்துவதில் தமிழக அரசு, பன்னெடுங்காலமாக, சமூக நீதிக் கொள்கையை கடைப்பிடித்து வருவது, தாங்கள் அறிந்ததே என்றும், ஒன்றிய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களில், ஏற்கனவே 27 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வரும் நிலையில், அனைத்து இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் மட்டும், ஏன் 27 சதவீதம் அளிக்கப்படுவதில்லை? என சென்னை உயர்நீதிமன்றம், இந்திய மருத்துவக் குழுவிடம் கடந்த 2020 ஆண்டே கேள்வி எழுப்பியுள்ளது.அனைத்து இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், கடந்த 2017 ஆண்டு முதல் 2020 ஆண்டு வரை, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படாத காரணத்தால், 11,000க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்., பி.டி.எஸ். மற்றும் எம்.டி.எஸ். படிப்புகளில் சேர்வதற்கு, வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார், 40-க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான சங்கங்கள், அப்போதைய ஒன்றிய சுகாதார அமைச்சருக்கு கோரிக்கைகள் அளித்த பின்னரும், ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காதது ஏன்? என்று தனது கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உடனடியாக தலையிட்டு, பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீதத்தை, அனைத்து இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பெற்றுத் தர, ஆணையிட வேண்டும் என்று, திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
ஒன்றிய அரசு நடத்தும் நீட் தேர்வில் அடுத்தடுத்த முறைகேடுகள் : பீகாரில் 20 மாணவர்களுக்கு முன்கூட்டியே விடையுடன் கூடிய வினாத்தாள் கொடுத்தது அம்பலம்!!
சமூக சீர்திருத்தவாதி தபோல்கர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து புனே நீதிமன்றம் தீர்ப்பு..!!
புதுச்சேரியில் கடும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதால் ஒத்துழைப்பு தர வேண்டும்: துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
வாக்களித்த மக்களுக்கே துரோகம் இழைத்தவர் ஜெகன்மோகன்; ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சி முற்றிலும் அவரால் தான் தடை பட்டது: சந்திரபாபு நாயுடு பேச்சு
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இதுவரை பிரஜ்வல் மீது புகார் அளிக்கவில்லை: தேசிய மகளிர் ஆணையம் தகவல்
குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வில் நூதன மோசடி; ஆசிரியர் மீது வழக்கு பதிவு: ரூ7 லட்சம், செல்போன் பறிமுதல்
டெல்லி ராஷ்டிரபதி பவனில் விழா விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது: ஜனாதிபதியிடமிருந்து பிரேமலதா பெற்றுக்கொண்டார்