இந்தியா உள்துறை அமைச்சர் வெறுப்பையும், அவநம்பிக்கையையும் மக்களின் வாழ்க்கையில் விதைத்து, நாட்டை மீண்டும் தோல்வியுறச் செய்துவிட்டார்: ராகுல் காந்தி ட்வீட் Jul 27, 2021 உள்துறை அமைச்சர் ராகுல் காந்தி டெல்லி: உள்துறை அமைச்சர் வெறுப்பையும், அவநம்பிக்கையையும் மக்களின் வாழ்க்கையில் விதைத்து, நாட்டை மீண்டும் தோல்வியுறச் செய்துவிட்டார் அமித்ஷா என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அசாம்-மிசோரம் எல்லையில் நடந்த மோதலில் அசாமை சேர்ந்த 6 போலீஸ்காரர்கள் பலியாகி உள்ளனர். இதனால் இரு மாநில எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. மிசோரம், அசாம் இடையிலான எல்லைப் பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களுக்காக நான் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன் என ராகுல் காந்தி ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியா தற்போது மோசமான விளைவுகளை அறுவடை செய்து வருகிறது என கூறினார். குலிசெர்ராவின் எல்லையோர பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அசாம் - மிசோரம் எல்லையில் ஏற்பட்ட மோதலில் பாதுகாப்பு பணியில் இருந்த 6 காவலர்கள் உயிரிழந்தாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. குலிசெர்ராவின் எல்லையோர பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடர்பாக மோதல் ஏற்பட்டது. மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினை அமைதி மற்றும் புரிந்துணர்வு சூழ்நிலையில் தீர்க்கப்பட வேண்டும் என்று மிசோரம் அரசு கூறியிருற்தது. சர்ச்சைக்கு அமைதியான தீர்வு காண ஒரு இணக்கமான சூழலை உருவாக்க அசாம் அரசுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம் என மிசோரம் முதலமைச்சர் சோரம்தங்கா தெரிவித்திரந்தார். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் தலையீட்டால், அசாம் காவல்துறை அந்த இடத்திலிருந்து விலகியதோடு, அந்த பணி சிஆர்பிஎஃப் வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
விமானப்படை வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல் காஷ்மீரில் 2வது நாளாக தேடுதல் வேட்டை: சந்தேகத்தின் பேரில் பலரிடம் விசாரணை
முல்லைப் பெரியாறு அணையில் கூடுதல் பராமரிப்பு கேரளா அரசுக்கு உத்தரவிட தமிழ்நாடு அரசு மனு: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்
அரசு பஸ் டிரைவருடன் தகராறு திருவனந்தபுரம் மேயர், கணவர் மீது வழக்குப்பதிவு: நீதிமன்ற உத்தரவின் பேரில் நடவடிக்கை
தமிழ்நாடு முழுவதும் 200 மையங்களில் 1.50 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்: இயற்பியல் கேள்விகள் கடினம்; தேர்ச்சி வீதம் குறையும் என அச்சம்
93 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது; நாளை 3ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: 1351 வேட்பாளர்கள் போட்டி; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
நீதியை உறுதி செய்வோம் ரோஹித் வெமுலா மரணம் குறித்த விசாரணையில் சந்தேகம் உள்ளது: காங்கிரஸ் டிவிட்டரில் கருத்து
உடல் உறுப்பு தானத்தை அதிகரிக்க ஐசியூக்களில் மூளை இறப்புகளை கண்காணிக்க வேண்டும்: ஒன்றிய அரசு அறிவுறுத்தல்
பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் வழக்கில் கைதான ரேவண்ணாவை 3 நாள் காவலில் விசாரிக்க எஸ்.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி
வேட்பாளரின் பிரசாரத்திற்கு எதிர்ப்பு; பாஜகவினர் தள்ளிவிட்டதால் விவசாயி பரிதாப பலி?- பஞ்சாப்பில் பதற்றம்
தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நாளை மாலை வரை ராட்சத அலை எழும்: இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு அனுமதி தர கேரளா அரசு தாமதம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு
நூபுர் சர்மா, டி.ராஜா சிங் உள்ளிட்ட பாஜக பிரபலங்களை கொல்ல சதித்திட்டம்: குஜராத்தை சேர்ந்த மத குரு கைது