பெங்களூரு : கர்நாடக பாஜகவிற்குள் உட்கட்சி மோதல் அதிகரித்து வந்த நிலையில், முதலமைச்சர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளார். எடியூரப்பா அரசின் 2 ஆண்டுகள் நிறைவு விழாவான இன்று, தான் ராஜினாமா செய்வதாக அறிவித்த அவர், பெங்களூருவில் உள்ள ராஜ்பவனுக்கு சென்று ஆளுநர் தவார் சந்த் கெலாட்டிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக மேலிடத்திற்கு உறுதி அளித்ததன் படி இரண்டு ஆண்டுகள் முதல்வர் பதவி வகித்து விட்டு ராஜினாமா செய்துள்ளேன். முதல்வர் பதவியிலிருந்து விலக கட்சி மேலிடம் எந்த நெருக்கடியும் தரவில்லை. நானே முன்வந்து முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினேன்.