நெமிலி : நெமிலி பேரூராட்சியில் ₹50 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட மேல் நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு நீண்ட காலமாக குடிநீர் பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால், இப்பகுதிமக்கள் மேல் நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் ேபரூராட்சி அதிகாரிகளிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தனர். இந்த கோரிக்கை மனுவை ஏற்ற அதிகாரிகள் மிக விரைவில் மேல்நீர்த்தேக்க தொட்டி கட்டிதரப்படும் என தெரிவித்தனர்.