திருமயம்: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் கடந்த 2018ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது போலீசார், அந்த பகுதியில் உயர்நீதிமன்றம் உத்தரவுபடி ஊர்வலம் செல்ல கூடாது என்று தெரிவித்தனர். இதையடுத்து பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, உயர்நீதிமன்றத்தையும் மற்றும் காவல்துறையையும் அவதூறாக பேசினார். இதுதொடர்பாக 8 பிரிவுகளின்கீழ் எச்.ராஜா உள்ளிட்ட 20 பேர் மீது திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் 3 ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட கோரி த.பெ.தி.க. வழக்கறிஞர் துரைசாமி மதுரை ஐகோர்ட் கிளையில் மனுதாக்கல் செய்தார்.