மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார மீனவ குப்பங்களில் நேற்று காலை திடீரென கடல் சீற்றம் அதிகரித்தது. இந்த சீற்றத்தால் மாமல்லபுரம் குப்பம், வெண்புருஷம், கொக்கிலமேடு குப்பம், புதிய கல்பாக்கம், புதுஎடையூர் குப்பம், பட்டிபுலம் குப்பம், நெம்மேலிகுப்பம், தெற்குபட்டு, திருவிடந்தை ஆகிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. சில மீனவர்கள் மட்டுமே கடலுக்கு சென்றனர்.