டர்ஹாம்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி வரும் 4ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக டர்ஹாமில் கவுண்டி செலக்ட் லெவன் அணியுடன் 3 நாள் பயிற்சி போட்டியில் இந்திய அணி ஆடியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 311, கவுண்டி அணி 220 ரன்கள் எடுத்தது. கடைசி நாளான நேற்று இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. 284 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய கவுண்டி அணி 15.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 31 ரன் எடுத்திருந்தபோது போட்டி டிராவில் முடித்துக்கொள்ளப்பட்டது.