சத்தியமங்கலம்: புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைக்கு கர்நாடகா மாநில வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வராததால் சின்ன வெங்காய விதை விலை வீழ்ச்சி அடைந்ததோடு விற்பனை ஆகாமல் தேக்கமடைந்தது. ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் வாரச்சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. இந்தசந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் சின்ன வெங்காயம் மற்றும் விதை வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. விதை வெங்காயத்தை வாங்க தாளவாடி மலைப்பகுதி மற்றும் கர்நாடக மாநிலம் கொள்ளேகால், சாம்ராஜ்நகர், மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வருவது வழக்கம்.